எங்கள் தேசம் தேசமாய் இல்லை எரியும் பிணக்காடு வேட்டுச் சத்தம் கேட்டு பழகிய செவிகளுக்கு அதுவே வேணுகானம் கூட்டி அள்ளும் உடல் தசைகளுக்கு கொள்ளி வைப்புக்கள் தேவை இல்லை நின்மதி என்பது நிரந்தரமற்றிட நீயா---- நானா ----யாரோ------ எவரோ நேற்றோ இன்றோ நேரமும் உண்டோ பயத்தோடு வாழும் பாக்கியம் எமக்கு மட்டும் தான்
ஈழத்தாய் பிரசவ வலியால் முக்குகிறாள் முனகுகிறாள் பிள்ளை பிறக்கும்முன்னே கொட்டும் தண்ணீர் குடம் ஆனால் இவளோ ரத்தம் ரத்தமாய் கொட்டோ கொட்டென்று குடம் குடமாய் கொட்டுகின்றாள் வாசல் வரை வந்த பிள்ளை வழி தவறிப்போகா
ஆழமாய் நாம் சிந்தித்தால் ஈழம் பிறப்பது உறுதி ஈழத்தில் கேட்க்கும் ஓலம் கேட்க யாரும் இல்லை இந்த அவலம் தினம் தினம் நிகழும் மரணம் இயற்கையின் நியதி
ஒவ்வொரு கணமும் விழும் பல நூறு பிணம் இது அரக்கரின் சதி பத்தி எரிகின்றது தேசம் பார்த்து ரசிப்பவர்அதிகம் கத்தி அழுது கேட்க்கின்றேன் என் கண்ணீர் துடை என்று அடுத்தவனும் அள்ளி வீசுகின்றான் அனலை அயலவன் என்று நினைத்தேன்
அவனும் அந்நியன் போல் நடக்கின்றான் நித்திரையிலும் எமக்கு மட்டும் தான் சித்திரவதை புத்தம் செய்த போதனையா கொன்ற பிணத்திலும் இச்சை தீர்த்து இன்பம் காணு என்று எத்தனை எத்தனை சோகங்கள் எடுத்து நான் இயம்ப இயலா துயரங்கள் அச்சம் கொண்டவன் இல்லை தமிழன் அஞ்சா நெஞ்சம் படைத்தவன் மறத்தமிழன் அஞ்சி ஒழிய நான் என்ன எலியா அடிபட்ட புலி
பாய்ந்து வருவேன் ஒரு நாள் பயந்து ஓடுவாய் அதனால் ஈழத்தாயின் சபதம் இது!
ஈழத்தமிழராக பிறந்த நாங்கள்அழிவை மட்டும் கண்டு நிற்கும் ஏதிலிகள். நின்மதியாய் வாழ ஏங்கும் அகதி அற்ற வாழ்வுக்கு ஏங்கும் மானிடத்தின் பகுதி நாங்கள்.பிறந்தவர்க்கு இறப்பு நிஜம் எங்களின் முற்றத்தில் நித்தமும் நிஜம்.
இரத்தவாடை எங்கள் வீட்டில் இன்றும் கந்தகப்புகைஎங்கள் மண்ணில். துன்பம் மட்டும் மீதிவாழ்வில் சற்றும் இன்பம் இல்லை சமாதானம் வந்ததுண்டு ஆனால் எந்த பயணும் தந்ததில்லை. பேச்சுக்கள் பல நடந்ததுண்டு உடன்பாடு கண்டதில்லை. பேச வந்த நாடு எல்லாம் புலிகளாகி போன பின்பு தனியனாக நாங்கள் இங்கு. சுற்றி நின்ற சொந்தமில்லை இறந்து கொஞ்சம் அழிந்து போச்சு பறந்து கொஞ்சம் தூரப்போச்சு.
வேர்வை விட்டு கட்டி வைத்து அழகுபார்த்த வீட்டில் எங்கள் கால்கள் பட்டு பல நாட்கள் ஆச்சு. கல்லு மட்டும் உண்டோ அங்கு புல்லுதான் முழைத்து மறைத்துள்ளதோ. குண்டை வைத்து இடித்தார்களா? -இல்லை இடித்து அள்ளிச் சென்றார்களா தொவியவில்லை. கிழுவை வெட்டி நட்டுவைத்தோம்.... எல்லை இட்டு அடைந்து வைத்தோம்.... எல்லை கடந்து வந்தவனால் எல்லையில்லா துன்பப்பட்டு எட்ட ஓடிப்போய் இப்போ அகதியாக வாழுகின்றோம்.... ஊனும் உயிரும் மட்டும் மிச்சம் சேர்த்து வைத்த சொத்தால் அச்சம் உயிரை கூட காக்க வேண்டும் என்றால் போராட வேண்டும் என்னும் நிலைதான் மிச்சம்....
காணிக்காக எல்லை இட்டோம் நாட்டுக்கு போடாது விட்டோம்... எல்லை இட்டகாணி இல்லை விளைந்து நின்ற நிலமும் இல்லை கட்டி வைத்த கோவில் இல்லை கும்பிட்ட காளி இல்லை.... நாட்டுக்கு எல்லை ஒன்று அன்றே நாங்கள் போட்டிருந்தால் பூட்டி வைத்து ஆசை தன்னை சிங்களவன் ஓய்ந்திருப்பான். சிரித்து மகிழ்ந்து வாழ்ந்த நாட்கள் தொலைந்து போயிருக்கா சுற்றிநின்ற சொந்தம் பறந்து போயிருக்கா அச்சம் மட்டும் மிச்சமாக எங்கள் வாழ்வு மாறியிருக்கா. காலம் இன்னும் போகவில்லை கைநழுவி வீழவில்லை கைகடந்து போனதெல்லாம் கைச்சேரும் நாழும் வரும் கைகோர்த்து நாம் நடந்தால் அந்த நாழும் தேடிவரும்
பட்ட துன்பம் கொண்டு நாங்கள் எம்மை பட்டை தீட்டி நிமிரவேண்டும். சுதந்திரத்தினை நெஞ்சில் இட்டு விடுதலைத்தீயாக எரிய வேண்டும். காளியை புத்தனை சித்தனை முருகனை நம்பித்தான் கும்பிட்டோம்.
பக்கத்து நாடுகளை வல்லரசு தேசங்களை மனித நேய வாதிகளை நம்பியே மூச்சு விட்டோம் இதுவரை. மறந்து விட்டோம் எம்மை நாம் உணர.எமக்கு உதவி யாரென புரிய. இந்தியா வந்து நிற்கும் தீர்வைத் தந்து நிற்கும் என்றார். அழிவு என்று வந்து விட்டால் அமெரிக்கா வந்து- எம்மை அள்ளித்தான் தூக்கும் என்றார். மிஞ்சியது யாரென்று இப்போதுதான் தெரியும் எம்மை துன்பத்தில் தூக்கியது யாரெனப்புரியும்.
அழிவுகள் புரிவோரை தெரிந்தும் புரியாது நடித்தார் கொல்லும் அவனுக்கு கொள்ளகலனில் ஆயுதம் அனுப்பி அனுசரணை செய்தார். எம்மை நின்மதியாய் வாழ விடாமல் தடுக்கும் அவனுக்கு வல்வளைக்க வழி சொல்லியும் கொடுக்கின்றார். மனதில் வடுப்பட்டு உள்ள தொல்லாம் விடுபட்டு உடம்பெல்லாம் காயத்துடன் காடெல்லாம் நாம் ஓட யார்வந்தார் சிங்களவன் எம்மை வேட்டையாட யார் மறித்தார் எம் இறப்பை கணக்கிட மட்டும் சிலர் வருவார்.
காட்டுமானை வேட்டைசெய்த நடிகைனையே சிறையில் வைத்தார் மானிடர் எம்மை கொல்ல வாய் நிறைய வாழ்த்தி நின்றார். சொந்த மண்ணில் நின்மதியாய் வாழ வாழ்வு கேட்ட எங்களுக்கு வெட்ட வெளியில் கொட்டில் கட்டி அகதியாக வாழ வைக்க மட்டும் பலர் முண்டி அடித்து ஓடி வந்தார் இறப்பர் பாயும் சட்டிபானையும் தரவும் சிலர் வந்தார். அடிமை வாழ்வு மட்டுமல்ல அகதிவாழ்வும் நாம் விரும்பவில்லை தந்தை செல்வாவும் கேட்கவில்லை.
காலம் வரும் என்று காத்திருந்தால் எம் மண் மாறும் சுடுகாடாய் காலத்துக்காக நாம் நடந்தால் கைச்சேரும் சுதந்திர மண்நாளை. வெள்ளையன் பேச்சுக்காக பார்திருந்தால் நம் கனவு பலிக்காது எதிரி தொகைக்கு அஞ்சிநின்றால் பட்ட துன்பம் அகலாது. இதுவரை தாங்கிய தலைவர் உள்ளார் காலனை தடுத்து நின்ற போராளி இன்னும் உள்ளான்
ஐந்து கோடி எதியோப்பியனை எதிர்த்து வெறும் மூபத்து லட்சமாய் வென்று நாடு கண்டர் எரித்திரியர். ஓன்றரை கோடிக்கு தயக்கம் எதற்கு. தயங்கி நின்றதால் தான் சுணங்கியது எங்கள் சுறுசுறுப்பு. பலமுறை தோற்றாலும் அஞ்சோம் அலை கடல் என எதிரி வந்தாலும் கஜனி முகமது நாங்கள் வெல்லும் வரை படையெடுப்போம் உன்னை வீழ்த்தும் வரை கண் துஞ்சோம்.
துட்ட கைமுனுவாய் நீங்கள் வஞ்சகை செய்தாலும் சத்தியம் நிச்சயம் வெல்லும் என நிறுவித்தான் ஓய்வோம். பொங்கி வரும் அலைக்கு பாறிவிழும் ஆலல்ல அரசல்ல நாங்கள் தனித்தே தாங்கி சாய்ந்தாலும் நிமிர்ந்து வழரும் ஒற்றை தென்னைகள். உலகம் எம்மை புரியும் நாள் தூரமில்லை தமிழர் எம்மை புரிய வைக்கும் நாளும் தொலைவில் இல்லை. தமிழர் கனவுதனை நனைவாக்கும் போராளி எமக்குண்டு தாங்கும் தலைவர் உண்டு எமக்காக அழுவதற்கு புலம் பெயர் உறவுண்டு உலகத்தமிழர் உண்டு.
தடுக்கி வீழ்ந்தாலும் துவண்டு வீழமாட்டோம் வீழ்ந்த போதும் எம் தாய்நிலத்தில் தான் விழுந்தோம் வீழ்பவர் வீழ வாழ்பவர் நாம் விடுதலைக்காய் நடப்போம் ஈழ விடுதலை இன்றிட்ட விதையல்ல வெறும் முழையும் அல்ல ஆழ வேரூன்றி அகலக்கிளை பரப்பிய விருட்சம் வேரறுக்கும் செல்லுக்கும் கொத்தும் மரங்கொத்தியின் கூர் சொண்டிற்கும் பாறிவிழும் பட்ட மரமும் அல்ல
கைப்பிடித்து நடந்நதவர் கைவிட்டு போனார். குருதி சொட்ட வீழ்பவர் பிணத்துடன் இதுவரை தனியேதான் நடந்தோம். தோள் கொடுத்து நின்றவர் தேளாக கொட்டித்தான் பிரிந்தார்கள் இழந்தோம் வீரரை பிள்ளையை சொத்தை அத்தையை மாமனை கைக்குழந்தையை பெண்ணை காணியை காதலியை இன்னும் இழக்கவில்லை நம்பிக்கையை மறக்கவில்லை பயணிக்கும் பாதையை தேடவில்லை பிறநாட்டர் தயவை நாடவில்லை அயலவன் அனுசரணையை கேட்பது ஒன்றுதான் அங்கீகாரம் மட்டும் தான் வாழ உரித்துள்ள இனம் என்னும் வார்த்தை மட்டும்தான்
எரியும் பிணக்காடு
வேட்டுச் சத்தம் கேட்டு பழகிய செவிகளுக்கு
அதுவே வேணுகானம்
கூட்டி அள்ளும் உடல் தசைகளுக்கு
கொள்ளி வைப்புக்கள் தேவை இல்லை
நின்மதி என்பது நிரந்தரமற்றிட
நீயா---- நானா ----யாரோ------ எவரோ
நேற்றோ இன்றோ நேரமும் உண்டோ
பயத்தோடு வாழும் பாக்கியம்
எமக்கு மட்டும் தான்
ஈழத்தாய் பிரசவ வலியால் முக்குகிறாள் முனகுகிறாள்
பிள்ளை பிறக்கும்முன்னே கொட்டும் தண்ணீர் குடம்
ஆனால் இவளோ ரத்தம் ரத்தமாய் கொட்டோ கொட்டென்று
குடம் குடமாய் கொட்டுகின்றாள்
வாசல் வரை வந்த பிள்ளை வழி தவறிப்போகா
ஆழமாய் நாம் சிந்தித்தால் ஈழம் பிறப்பது உறுதி
ஈழத்தில் கேட்க்கும் ஓலம்
கேட்க யாரும் இல்லை இந்த அவலம்
தினம் தினம் நிகழும் மரணம் இயற்கையின் நியதி
ஒவ்வொரு கணமும் விழும் பல நூறு பிணம்
இது அரக்கரின் சதி
பத்தி எரிகின்றது தேசம் பார்த்து ரசிப்பவர்அதிகம்
கத்தி அழுது கேட்க்கின்றேன் என் கண்ணீர் துடை என்று
அடுத்தவனும் அள்ளி வீசுகின்றான் அனலை
அயலவன் என்று நினைத்தேன்
அவனும் அந்நியன் போல் நடக்கின்றான்
நித்திரையிலும் எமக்கு மட்டும் தான் சித்திரவதை
புத்தம் செய்த போதனையா கொன்ற பிணத்திலும்
இச்சை தீர்த்து இன்பம் காணு என்று
எத்தனை எத்தனை சோகங்கள் எடுத்து நான்
இயம்ப இயலா துயரங்கள்
அச்சம் கொண்டவன் இல்லை தமிழன்
அஞ்சா நெஞ்சம் படைத்தவன் மறத்தமிழன்
அஞ்சி ஒழிய நான் என்ன எலியா அடிபட்ட புலி
பாய்ந்து வருவேன் ஒரு நாள்
பயந்து ஓடுவாய் அதனால்
ஈழத்தாயின் சபதம் இது!