பள்ளிச் சிறார்களும் பச்சிளம் குழந்தைகளும் அள்ளி அணைத்து அன்பு காட்டிய அன்னையும் அப்பாவும் எங்கே கைகள் எங்கே கால்கள் யார்கண்டது பிள்ளையை யார் கண்ண்டது உறவுகளை பாருங்கையா கொடுமைகளை படை நடத்தும் பாதகனின் வெற்றிச் செய்தியாம் சோனியாவுக்கும் அவள் சேடிகளுக்கும் .மகிந்த்தவிற்கும் அவன் மச்சான்மாருக்கும் பதில் சொல்வோம் வெகுவிரைவில் பாத்திருங்கள் ..பழிதீர்க்கும் காலம் வரும் காத்திருங்கள் .......ஆதவன்
எதிரி என்பவன் உன்னை குழி தோண்டி புதைத்தாலும் கலங்காதே தமிழா தோண்டி புதைத்த அடிக்கல்தான் ஆயிரம் மாடிக்கு படிக்கல்
உதிர்ந்துதான் போனாய் என்று ஏங்கி நீ விடாதே கண்ணீர் பள்ளத்தில் வீழ்கின்ற நீர்தான் பாய்ந்தோடும் ஆறாய் சேரும் வானத்து நீர் வீழ்ந்துதான் பெரு வெள்ளமாய் உலகையே மிரட்டும் நிலத்தில் வீழ்கின்ற விதையே பெரு விருட்சமாய் நிழல் தந்து நிற்கும்
தோல்வியை கண்டதும் வீட்டுக்குள் ஒழிந்து சோகத்தில் உறங்கிட வேண்டாம். உறக்கத்தில் நீ இருந்தாலும் பறக்க விட்டு விடு உன் புத்தியை
புதுமையை தேடு வாழ்வில் அதை கண்டதும் ஏங்கணும் பகைவர் பயத்தினால் நடுங்கணும் அவர்கள்
தமிழா இரவும் பகலும் உண்டேல் அங்கு தோல்வியும் வெற்றியும் உண்டு பகைவரின் வெற்றியின் பின்னால் சில கயவர் நிச்சயம் இருப்பார் தோல்வியில் அனைவரும் அழுதால் அந்த கயவர் வெல்வார்கள்
இரை தேடி தோற்ற புலி பசியாலே படுத்து செத்தது உண்டா? தோல்விக்கு பயந்தால் அது அடிமைக்கு வித்திடும் வெற்றிக்காய் நீ உழைத்தால் அது உன்னை அரியாசனத்தில் இட்டு மகுங்கள் சூட்டிடும்
நுட்பமாய் சிந்தித்து வீரமாய் நீ எழு இரும்பே வளையும் இடியே முனகும்
ஓடும் நீருக்கு தடை இட்டால் அது கூடி உரையே அழித்திடும் ஓடி உழைக்கும் உன்னை தடுத்தால் பகைவரின் தலைகள் தப்பாமல் உருளும்
தோல்வியை தந்தவனை தோல்விக்குள் தள்ளி வெற்றியை அரவணைக்க தைரியமாய் நீ எழு
விழ்ச்சி நிலையில்லை அதன் தொடர்ச்சியே வெற்றி தமிழா நாளையே பெரு வெற்றி உன்னை வந்து சேரும் அது வரை காத்திரு
ஈழ தமிழருக்காக நீங்கள் கூட்டம் போடுகிறீர்கள் என செய்தி வாசித்த போது சிரித்தேன் என் மனதில் ...... இது என்ன சினிமாவா..?? பொய் கதையும் பொய் வீரத்தயும் சொல்ல.... !!! இவர்களுக்கு என்ன தெரியும் நம்மை பற்றி என்ன பேச போகிறார்கள் நம் விடுதலைக்காக....!!! என நினைத்தேன்...
நீங்களும் தமிழர்கள் தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள் ராமேஸ்வரத்தில்..!! அண்ணன் சீமானின் வார்த்தைகள் ஈடியாக பதிந்து இருக்கும் ஒவ்வொரு இந்தியா சகோதரனுக்கும் ..!!
சொல்ல மறந்த கதை சொன்ன சேரனின் ஆக்ரோசம் ...! பருத்தி வீரம் சொன்ன அமீ்ரின் கொந்தளிப்பு...! வில்லத்தனம் காட்டி வந்த மன்சூர் அலிகானின் வீர பேச்சு .! என் இனிய தமிழ் வணக்கம் சொன்ன பாரதிராஜா வின் உண்மை பேச்சு..!! கொலைகார பாவி ஆகவும் தயார் சொன்ன கருணாசின் மன திடம்..! அனைத்தையும் பார்த்த போது சூடேறியது என் ரத்தம் மட்டும் அல்ல... அனைத்து தமிழர்களுக்கும் தான் ..!!!!!!
எம் வாழ்க்கையை படம் பிடித்து கவிதையாக விவரித்த நா முத்துகுமாருக்கு என் தமிழ் வணக்கம் ..!! எதிர் பார்க்க வில்லை உங்களிடம் இருந்து இதை நான்
தொடரட்டும் உங்கள் கொந்தளிப்பு ஆட்டம் காண வேண்டும் டெல்லி..!! அடங்கி போக வேண்டும் கொழும்பு ..!!! அதுவரை போரடுங்கள் உங்கள் ஈழ சகோதருக்காக....!!!!!!!!!