தாயகத்தில் புலிவீரர்கள் உயிர்துறக்க அவர்கள் தியாகத்தால்
புலத்தில் குளிர்காயும் கோழைகளில் நானும் ஒருவன்.
விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல
விடுதலைப்புலிகள் ஒரு மக்கள் இயக்கம்
புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள்
மகிந்த யுத்தத்தை ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை தப்பியோடியுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை 25000 இலும் அதிகம் என்று சிங்கள வார இதழான ராவய தெரிவித்திருக்கிறது.
இந்த தை மாதம் வரையிலும் தப்பியோடியவர்களின் எண்ணிக்கை 15000 என்று படை வட்டாரங்களை ஆதாரங்காட்டி இச்செய்தி வெளிடப்பட்டிருக்கிறது.
போர் நடக்கும் பிரதேசங்களில் இருந்து தலைமறைவாகும் தமது சகாக்களைக் கண்டுபிடிக்க அங்கிருந்து வெளியேறும் பேரூந்துகள், மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் என்று ராணுவத்தின் காவல்ப்பிரிவு கடுமையான சோதனைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகச்சாயலிலும், உடல்கட்டமைப்பிலும் ராணுவ வீரனைப் போல இருக்கும் ஆண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆவணி, புரட்டாதி மாதங்களில் மட்டுமே தப்பியோடிய ராணுவத்தினரின் எண்ணிக்கை சுமார் 700 என்று தெரிவிக்கும் இந்த அறிக்கை, அதிகாரிகள் தமக்குக் கீழ் சேவையாற்றும் ராணுவ வீர்ர்களின் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளை கூர்ந்து அவதானித்து வருவதாகவும் குறிப்பிடுகிறது
மடு மாதாவே உந்தனுக்கா ! அகதியாய் அலைகின்றோம் தமிழனாய் பிறந்ததனால் தாயே தமிழன் வாழிடத்தில் தடம்பதித்து அருள் புரிந்த காரணத்தால் தாயே நீயும் அகதியாய் அலைகின்ற நிலையின்று வந்ததுவோ !
ஏதிலியாய் வந்தோரை காத்து நின்ற தாயே – நீயே ஏதிலியாய் இடம் பெயரும் துயரநிலை ஏனோ ? வல்லாதிக்க வெறி கொண்ட பொல்லாத சிங்களத்தின் நில்லாத கொடுமையினால் நீயுமின்று எம்மைப்போல் கேட்பதற்கே யாருமின்றி அந்தரிக்கும் நிலையேன் !
நிலையற்ற உலகமிதில் நீக்கமற நிறைந்தே குறைவற்ற கருணை மழை பொழிந்த மடுத் தாயே குண்டு மழை பொழிகின்ற இரக்கமற்ற சிங்களத்தின் கொடுஞ் செயலால் தாயே நீயும் இடம் பெயரும் துயரநிலை கண்டு மனம் நொந்தே கலங்கி நெஞ்சம் எரிகிறது கருணையுள்ளத் தாயே !
நினைத்த படி களமின்றி நிலைகுலைந்து நிற்கின்ற கொலை வெறிப் படைகளுக்கு ஆலயமோ தேவாலயமோ பள்ளிவாசலோ எதுவானால் என்ன தமிழினத்தின் பகுதியெனில் கொலைக்களமாய் மாற்றிவிடும் கொள்கை என்றும் மாறாது மாற்றமொன்று வேண்டுமெனில் எம் தேசம் விடிவதுதான் ஏற்றதொரு நிலையாகும் !
அரசுக்கு அரசென்று ஆலவட்டம் பிடித்தபடி கண்டணங்கள் தேவையில்லை நல்ல காரியங்கள் செய்வீரா எஞ்சியிருக்கின்ற ஈழத்தமிழினத்தை இவ்வுலகில் காப்பதற்கு இதயம் உள்ளவரே உண்மைக்காய் குரல் கொடுக்க உள்ளம் திறப்பீரோ !
ஈழமக்களது இதயமிருந்தவளே யாதுமிழந்து அகதியானதுமேன் பொறுத்து பொறுத்துப் போதுமிந்த அகதி நிலை தீது புரிகின்ற அரசுகட்கு தீர்வேதும் இல்லையா மடுத்தாயே நியாயத் தீர்ப்பெழுதும் நேரமின்னும் வரவில்லையா ?
இந்த தை மாதம் வரையிலும் தப்பியோடியவர்களின் எண்ணிக்கை 15000 என்று படை வட்டாரங்களை ஆதாரங்காட்டி இச்செய்தி வெளிடப்பட்டிருக்கிறது.
போர் நடக்கும் பிரதேசங்களில் இருந்து தலைமறைவாகும் தமது சகாக்களைக் கண்டுபிடிக்க அங்கிருந்து வெளியேறும் பேரூந்துகள், மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் என்று ராணுவத்தின் காவல்ப்பிரிவு கடுமையான சோதனைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகச்சாயலிலும், உடல்கட்டமைப்பிலும் ராணுவ வீரனைப் போல இருக்கும் ஆண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆவணி, புரட்டாதி மாதங்களில் மட்டுமே தப்பியோடிய ராணுவத்தினரின் எண்ணிக்கை சுமார் 700 என்று தெரிவிக்கும் இந்த அறிக்கை, அதிகாரிகள் தமக்குக் கீழ் சேவையாற்றும் ராணுவ வீர்ர்களின் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளை கூர்ந்து அவதானித்து வருவதாகவும் குறிப்பிடுகிறது